நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்

குஜராத்: 

போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்ட bhoomi chauhan உயிர்பிழைத்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தனது கணவரோடு லண்டனில் வசித்துவரும் bhoomi chauhan என்ற பெண்மணி விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார். 

அவர் விடுமுறையை முடித்துக் கொண்டு லண்டன் புறப்பட நேற்று தயாரானார். 

போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவர் விமானத்தை தவறவிட்டார்.

விமானத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்திலிருந்த பூமி சவுகானுக்கு விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விபத்தை எண்ணி பார்க்கும் போது தனது உடல் நடுங்கியதாகவும் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset