
செய்திகள் இந்தியா
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது: உயிர் பிழைத்த விஸ்வாஸ் தகவல்
குஜராத்:
அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் விஸ்வாஸ் குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த பிரிட்டீஷ் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
அவருக்கு மார்பு, கால், கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு விஸ்வாஸ் குமார் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
40 வயதான விஸ்வாஸ் குமார் மனைவி குழந்தைகளுடன் 20 வருடங்களாக லண்டனில் வசித்து வருகிறார்.
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது என்று அவர் குறிப்பிட்டார்.
தான் கண் விழித்தப் போது தன்னைச் சுற்றி உடல்களும் விமானத்தின் பாகங்களும் சிதறிக் கிடந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஸ்வாஸ் குமார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
June 14, 2025, 10:22 am
போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
June 13, 2025, 10:05 pm
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
June 13, 2025, 9:50 pm
ஏர் இந்தியா 171 விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: அடுத்தது என்ன?
June 13, 2025, 5:22 pm
10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்
June 13, 2025, 1:06 pm
12.06 ராசியான எண்: குஜராத் முன்னாள் முதல்வரின் கடைசி விமானப் பயணம்
June 13, 2025, 1:03 pm