
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call
புது டெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அவசர காலத்திற்கு அழைக்கப்படும் 'May day call' விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்துள்ளது. பதிலளிக்க கட்டுப்பாட்டு அறை முற்பட்டும் பலனளிக்கவி்ல்லை.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே விமானம் சுமார் 600 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மதியம் 1:38 மணிக்கு மேகானி குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 இருந்தனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்தில் 204 பேர் இறந்துவிட்டனர் என்று முதல்கட்ட அறிவிப்பை நகர காவல்துறை கமிஷ்னர் ஜி எஸ் மலிக் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:22 pm
10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்
June 13, 2025, 1:06 pm
12.06 ராசியான எண்: குஜராத் முன்னாள் முதல்வரின் கடைசி விமானப் பயணம்
June 13, 2025, 1:03 pm
அஹமதாபாத் விமான விபத்து: வானத்தில் முடிந்த கனவுப் பயணம் – ஒரு குடும்பத்தின் சோகமயமான முடிவு
June 13, 2025, 1:00 pm
அஹமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள் நிறைவு: மரணம் 265 ஆக உயர்வு
June 13, 2025, 7:16 am
விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்
June 12, 2025, 11:03 pm
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
June 12, 2025, 9:42 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
June 12, 2025, 5:37 pm