நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call

புது டெல்லி: 

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா   போயிங் 787 விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அவசர காலத்திற்கு அழைக்கப்படும் 'May day call' விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்துள்ளது. பதிலளிக்க கட்டுப்பாட்டு அறை முற்பட்டும் பலனளிக்கவி்ல்லை.

ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே விமானம் சுமார் 600 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மதியம் 1:38 மணிக்கு  மேகானி குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 இருந்தனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தில் 204 பேர் இறந்துவிட்டனர் என்று முதல்கட்ட அறிவிப்பை நகர காவல்துறை கமிஷ்னர் ஜி எஸ் மலிக் தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset