நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: 242 பயணிகளின் நிலை என்ன?

அகமதாபாத்:

புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகள் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் இருந்தனர். அதே வேளையில் கேப்டன் உட்பட 12 அதிகாரிகள் விமானத்திக் இருந்தனர்.

விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. 

இந்த விபத்து விமானம் புறப்படும் போது நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம் என்றும் கூறப்படுகிறது.

விமான விபத்தைத் தொடர்ந்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பேர் மரணமடைந்திருக்கலாம் என ஊடக செய்திகள் கூறுகின்றன.

இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset