நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வியட்நாமை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடிய ஹரிமாவ் மலாயா அணி: பிரதமர் அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர்: 

நேற்றிரவு நடைபெற்ற 2027 ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி வியட்நாம் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. 

இந்த வெற்றி என்பது மலேசியா அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அனைத்து ஹரிமாவ் மலாயா விளையாட்டாளர்களுக்கும் பிரதமர் அன்வார் தனது மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்து கொண்டார். 

மலேசியா அணியின் நிலையான அடைவுநிலை தொடர்ந்து இருக்கவும் அடுத்தடுத்த ஆட்டங்களில் மலேசியா வெற்றிப் பெறவும் வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் ஹரிமாவ் மலாயா அணியை வெகுவாக பாராட்டிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு மலேசிய காற்பந்து சங்கமான எஃப் ஏ.எம் நன்றி தெரிவித்து கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset