நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படாது: நிதியமைச்சகம் 

பெட்டாலிங் ஜெயா: 

தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படை உணவுகள் மற்றும் உள்ளூர் பழங்களுக்கு விதிக்கப்படாது  5% விற்பனை வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்எஸ்டியின் கீழ் விதிக்கப்படும் 5 விழுக்காடு வரி விதிக்க விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் பட்டியல் அரசு இதழிலில் வெளியிடப்பட்டிருப்பதையும் நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியது. 

இப்பட்டியலில் இடம்பெறாத பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சகத்த்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

அரிசி, கோதுமை, சர்க்கரை, உப்பு மற்றும் இறைச்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படை உணவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. 

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்க்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று நிதியமைச்சகம் குறிப்பிட்டது.

உள்ளூரில் விளையும் பழங்களுக்கு எந்த விற்பனை வரியும் விதிக்கப்படாது. 

அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset