நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு

மும்பை: 

மும்பையில் கூட்ட நெரிசலுடன் சென்ற இரு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற பயணிகள் மோதி கீழே விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ரயில் காவலரும் ஆவார். ஒரு குறுகிய வளைவில் இரு ரயில்களும் வேகமாக கடந்து சென்றபோது படிக்கட்டில் தொங்கிய பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் மோதி கீழே விழந்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படிக்கட்டில் தொங்கிய ஒரு பயணி அணிந்திருந்த பை, எதிரே வந்த ரயிலின் பயணிகள் மீது தட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு வசதியை ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset