செய்திகள் இந்தியா
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
மும்பை:
மும்பையில் கூட்ட நெரிசலுடன் சென்ற இரு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற பயணிகள் மோதி கீழே விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரயில் காவலரும் ஆவார். ஒரு குறுகிய வளைவில் இரு ரயில்களும் வேகமாக கடந்து சென்றபோது படிக்கட்டில் தொங்கிய பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் மோதி கீழே விழந்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படிக்கட்டில் தொங்கிய ஒரு பயணி அணிந்திருந்த பை, எதிரே வந்த ரயிலின் பயணிகள் மீது தட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு வசதியை ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
