
செய்திகள் இந்தியா
அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு: கணவரை கூலி படை ஏவி கொலை செய்த மணமகள்
புதுடில்லி:
தேனிலவு சென்ற போது கணவரை கூலி படை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர் கடந்த மாதம் சோனம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் மனையுடன் மேகாலயா பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் கடந்த மே 23ஆம் தேதி காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் விளைவாக ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த தேடுதலில் ஒரு கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கொலை என்று யூகிக்க தொடங்கிய போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவி சோனம் நேற்று பெற்றோரிடம் தனது இருப்பிடம் குறித்து கூறியுள்ளார்.
இந்த தகவலை சோனமின் பெற்றோர் போலிசாருக்கு தெரிவிக்க, காஜிபூர் அருகே உள்ள தாபாவில் சோனமை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சோனமிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி சோனம், விருப்பமின்றி ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்துகொண்டு, தனது அப்பாவின் கடையில் வேலை செய்யும் ராஜ் குஷாலா என்பவருடன் நீண்ட காலம் பழகி வந்துள்ளார்.
இதையடுத்து சோனம் தனது கணவரை தனியாக அழைத்து சென்று ராஜ் குஷாலா உதவியுடன் சிலரை சேர்த்துக்கொண்டு கணவரை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜ் குஷாலா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி படை ஏவி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 9:19 pm
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
June 10, 2025, 6:47 pm
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
June 9, 2025, 4:10 pm
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின
June 8, 2025, 6:37 pm
தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி
June 8, 2025, 5:19 pm
66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா
June 8, 2025, 12:17 pm
மணிப்பூரில் ஊரடங்கு; இணைய சேவை துண்டிப்பு
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 5:37 pm