நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: எம்சிஎம்சி

சைபர் ஜெயா:

தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் எந்தவொரு உண்மையும் இல்லை.
 
எம்சிஎம்சி எனப்படும் தேசிய தகவல், பல்லூடக ஆணையம் இதனை உறுதிப்படுத்தியது.
 
கைத்தொலைபேசி தரவு  திட்டத்தின் மூலம் தனிப்பட்ட பயனர் தரவை முழுமையாக ஒப்படைக்குமாறு எம்சிஎம்சி, அரசு  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறும் அரசியல் எழுத்தாளர் லிம் சியான் சீயின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

அரசாங்கம் மக்களின் தனிப்பட்ட தரவை அமைதியாகப் பிழிந்து எடுக்க முயற்சிப்பதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

 இந்தக் கூற்று ஆதாரமற்றது. உண்மையான உண்மைகளுக்கு முரணானது என்று எம்சிஎம்சி விளக்கம் தந்துள்ளது.

கைத்தொலைபேசி பிராட்பேண்ட் சந்தாக்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள்,  பார்வையாளர்களின் எண்ணிக்கை, உள்நாட்டு பயண விகிதங்கள் போன்ற சுற்றுலா குறிகாட்டிகளை உருவாக்கும் நோக்கத்திற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சேகரிக்கப்பட்ட தரவுகள் பொதுவானது. குறிப்பாக பயனரின் பெயர், அடையாள அட்டை எண் அல்லது தொலைபேசி எண் போன்ற எந்த தனிப்பட்ட தகவலும் அதில் இல்லை.

சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டன.

ஒன்று தரவை உள்நாட்டில் செயலாக்கி அநாமதேயப்படுத்தப்பட்ட தரவை எம்சிஎம்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லது அதிகாரப்பூர்வ செயலாக்கத்திற்காக பயனரின் அடையாளம் இல்லாமல் தரவை தொடர்ந்து சமர்ப்பிப்பது என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் விளக்கமாகக் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset