நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் சுல்தானை பார்த்து கதறி அழுத பல்கலைகழக மாணவர்களின் பெற்றோர்

ஈப்போ:

அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டாம்.

பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா இதனை வலியுறுத்தியதாக பேரா அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் மியோர் ஹஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் இதனை கூறினார்.

15 உப்சி பல்கலைக்கழக மாணவர்களின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து அனைவருக்கும்  ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இதுபோன்ற துயர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, குறிப்பாக சட்ட அமலாக்கம், ஒழுங்குமுறை அடிப்படையில் முன்னேற்றத்திற்காக இருக்கும் பலவீனங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்வையும் மரணத்தையும் எல்லாம் வல்ல இறைவன் தீர்மானிக்கிறான் என்பது உண்மைதான் என்றாலும், அச்சுறுத்தல்கள், ஆபத்துகள்,  பேரழிவுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாடுபடவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சுல்தான் கூறியதாக என்று ஹஸ்புல்லா கூறினார்.

முன்னதாக பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் பிள்ளைகளை இழந்த பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் சுல்தானைப் பார்த்து கதறி அழுதது பார்க்க உருக்கமாக இருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset