நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்துக்கு காரணமாக பேருந்து நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் கடிதம் வழங்கப்பட்டது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

விபத்துக்கு காரணமாக பேருந்து நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் கடிதம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

இன்று அதிகாலை 15 பல்கலைக்கழக மாணவர்கள் பலியான விபத்தில் தொடர்புடைய பேருந்தின் நடத்துநருக்கு நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்) விளக்கம் கேட்கும் கடிதத்தை வழங்கியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பேருந்து நடத்துனர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில், சாலைப் போக்குவரத்துத் துறை பேருந்து நிறுவனம் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆய்வு, தணிக்கையை மேற்கொண்டு வருகிறது.

நிறுவனத்தின் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதில் ஏதேனும் அலட்சியம் அல்லது தோல்வி இருந்ததா என்பதைக் கண்டறிய இரு நிறுவனங்களும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

தணிக்கை, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset