நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்துக்குள்ளான பேருந்து வேகமாகச் சென்றதற்கான முக்கிய ஆதாரம் போலிசாருக்குக் கிடைத்துள்ளது: நூர் ஹிசாம்

ஈப்போ:

விபத்துக்குள்ளான பேருந்து வேகமாகச் சென்ற முக்கியமான ஆதாரம் போலிசாருக்குக் கிடைத்துள்ளது.

பேரா மாநில போலிஸ் தலைவர் நூர் ஹிசாம் நூர்டின் இதனை கூறினார்.

உப்சியைச் சேர்ந்த  15 மாணவர்கள் பலியான ஒரு பயங்கரமான விபத்தை உள்ளடக்கியதாகக் கூறப்படும் டேஷ்போர்டு கேமரா காட்சிகள், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதைக் காட்டுகிறது.

மேலும் அதில் பேருந்து சறுக்கிச் சென்று சாலைத் தடுப்பில் மோதியது.

வீடியோவின் உரிமையாளர் விசாரணை அதிகாரிகளுக்கு ஆய்வு செய்வதற்காக முக்கியமான ஆதாரத்தை ஒப்படைக்க முன்வந்ததாகக் கூறினார்.

இதுவரை டாஷ்கேம் காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காட்சிகளை ஆய்வு செய்வதற்காக நாங்கள் அதை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.

மேலும் உரிமையாளரிடமிருந்து ஒரு வாக்குமூலம்  எடுக்கப்படும் என்று ஈப்போவின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு சென்ற அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset