நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தரவுகளை ஒப்படைக்க வேண்டும்; கைத்தொலைபேசி பயனர்கள் வேறு வழியில்லை: எம்சிஎம்சி

புத்ரா ஜெயா:

தரவுகளை  ஒப்படைப்பதை விட கைத்தொலைபேசி பயனர்களுக்கு வேறு வழியில்லை.

எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு, பல்லுடக ஆணையத்தின் துணை இயக்குநர் சுர்கர்னைன் முஹம்மத் யாசின் இதனை கூறினார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக அடையாளம் காணப்படாத கைத்தொலைபேசி தரவை சேகரிப்பதை உள்ளடக்கிய தற்போதைய முன்னோடித் திட்டத்திலிருந்து கைத்தொலைபேசிப் பயனர்கள் விலகுவதற்கு வேறு வழியில்லை.

2023 ஏப்ரல் 19ஆம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின் அடிப்படையில் இந்தத் தரவு சேகரிப்பு செயல்படுத்தப்படுகிறது.

தேசிய வளர்ச்சிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

ஆகையால் ஒழுங்குமுறை தேவைகளுக்கு அனைவரும் இணங்க வேண்டும்.

மலேசியப் புள்ளியியல் துறையால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பெரிய தரவுத் திட்டம், கைத்தொலைபேசி தரவு என்ற தலைப்பிலான முன்மொழிவு ஆவணத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடுகளை ஆதரிப்பதற்காக அடையாளம் காணப்படாத கைத்தொலைபேசி  தரவைப் பகிர அனுமதிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset