
செய்திகள் மலேசியா
எங்களை குண்டர் கும்பல் என விமர்சனம் செய்யாதீர்கள் : AMBANG KOTA ENTERPRISE அறிக்கை
பெட்டாலிங் ஜெயா,
குண்டர் கும்பலோடு எங்கள் நிறுவனத்தை ஒப்பிடாதீர்கள். நாங்கள் சட்டப்பூர்வமாக பணிகளை முன்னெடுக்கின்றோம் என WCE Expressway நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரான AMBANG KOTA ENTERPRISE அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்
WCE விரைவுசாலைக் கட்டுமானத் திட்டத்தின் கீழ், AMBANG KOTA ENTERPRISE நிறுவனம், தளத்தை சுத்தப்படுத்தும் மற்றும் கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மே 17, 2024 முதல் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், முக்கிம் கம்போங் ஜாவா பகுதியில் மட்டுமே சிறிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் சில குடியிருப்பாளர்கள் இடிப்புப் பணிகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என்றும், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் நிறுவனம் மீதும் WCE Expressway மீதும் சுமத்தப்படுவதாகவும் AMBANG KOTA ENTERPRISE கூறியுள்ளது.
சட்டப்படி செயல்படுகின்றோம்
இதனிடையே தங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டப்படி முன்னெடுக்கப்படுவதாகவும், வீடு மற்றும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட்ட ஆவணங்களும், நில அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட Borang K ஆவணங்களும் நிறுவத்திடம் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் AMBANG KOTA ENTERPRISE நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஊழியர்கள். மாறாக சிலர் குற்றம் சாட்டுவதைப் போல கூலிகள் அல்லது குண்டர் கும்பலை சார்ந்தவர்கள் இல்லை என அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாத மத்தியில் நிறைவு பெறும்
முன்னதாக இந்த நடவடிக்கையில் குடியிருப்பாளர்கள் அதிருப்தி கொண்டால் நீதிமன்றத்தின் உதவியை நாடும் உரிமை உடையவர்கள் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தாங்கள் தங்களது பணியை சட்டபூர்வமாக தொடர்வோம், மகிழ்ச்சியில்லை என்றால் WCE Expressway மீது வழக்குப் புகார் செய்யலாம்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.
ஜூன் மாதம் மத்தியில் இடிக்கும் பணிகள் முழுமையாக முடிவடையும் என AMBANG KOTA ENTERPRISE உறுதி தெரிவித்துள்ளது.
“விரைவுசாலை கட்டுமான பணிகள் எதுவும் தாமதமடையாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக, எங்களை நியமித்த WCE Expressway நிறுவனத்தின் பணி நேரத்தை மதிக்கிறோம். அதற்கேற்ப, எந்த சவால்களை கடந்து பணியை நிறைவு செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என அ. கணேசன் (AK) தெரிவித்துள்ளார்.
இதனிடையே சமூகத்தில் எதிர்வினை ஏற்படுத்தும் விதமான அவதூறுகள் தவிர்க்கப்பட்டு, சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் பணிகள் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென AMBANG KOTA ENTERPRISE வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொறுப்பு துறப்பு : இந்த அறிக்கை AMBANG KOTA ENTERPRISE வெளியிட்டது. இதற்கு நம்பிக்கை எந்த வகையிலும் பொறுப்பேற்காது
தொடர்புடைய செய்திகள்
June 9, 2025, 10:23 pm
பேராக் சுல்தானை பார்த்து கதறி அழுத பல்கலைகழக மாணவர்களின் பெற்றோர்
June 9, 2025, 9:54 pm
இடைத்தேர்தல் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனாக இருக்காது: தெங்கு ஸஃப்ருல்
June 9, 2025, 9:49 pm
தரவுகளை ஒப்படைக்க வேண்டும்; கைத்தொலைபேசி பயனர்கள் வேறு வழியில்லை: எம்சிஎம்சி
June 9, 2025, 9:38 pm
விற்பனை வரி மறுஆய்வு, சேவை வரி விரிவாக்கம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது: அமீர் ஹம்சா
June 9, 2025, 9:10 pm
லோரி ஓட்டுநரை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பேருந்து நிறுவனம் மறுத்தது
June 9, 2025, 4:49 pm