நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோரி ஓட்டுநரை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பேருந்து நிறுவனம் மறுத்தது

கோலாலம்பூர்:

விபத்துக்குள்ளான பேருந்துக்கு லோரி ஓட்டுநரை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பேருந்து நிறுவனம் மறுத்தது.

கெனாரி உத்தாரா நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி முஹம்மத் நஸ்ரி நவனி இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலையில் நிகழ்ந்தை பேருந்து விபத்தில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய பேருந்தை லோரி ஓட்டுநர் ஓட்டினார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இக் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அசல் ஓட்டுநர் விடுமுறையில் இருந்ததால் நேற்று வேலை செய்ய முடியாததால், மாற்று ஓட்டுநரை பணியமர்த்தப்பட்டது,

ஓட்டுநரிடம் உரிய பரிசோதனைகள் ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆகையால்ல் இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது.

மாற்று ஓட்டுநர் வேறொரு பேருந்து நிறுவனத்திலிருந்து பணியமர்த்தப்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் அவருக்கு நீண்ட பயணங்கள் உட்பட பேருந்துகளை ஓட்டிய அனுபவம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டது போல் லோரி ஓட்டுநர் அல்ல.

மேலும் இவ்விபத்து குறித்த விசாரணைகளுக்கு உதவ நாங்கள் தயார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset