
செய்திகள் இந்தியா
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின
குவாஹாட்டி:
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 741 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 6,311.16 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. 1.44 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலைமை மேம்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளிலும் பெருமளவில் நீர் வடிந்துவிட்ட போதிலும், குறிப்பாக 6 மாவட்டங்களில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீபூமி, ஹைலாகண்டி, காசார் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 4 மாவட்டங்களில் 130 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காம்ரப் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மேலும் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 9:19 pm
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
June 10, 2025, 6:47 pm
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
June 10, 2025, 11:48 am
அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு: கணவரை கூலி படை ஏவி கொலை செய்த மணமகள்
June 8, 2025, 6:37 pm
தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி
June 8, 2025, 5:19 pm
66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா
June 8, 2025, 12:17 pm
மணிப்பூரில் ஊரடங்கு; இணைய சேவை துண்டிப்பு
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 5:37 pm