
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் விரைவில் வரும்: ரொனால்டோ
முனிச்:
அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் விரைவில் வரும்.
போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதனை கூறினார்.
கால்பந்து உலகில் தற்போது ரொனால்டோ, மெஸ்ஸிக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அதேபோல் இருவரது ரசிகர்களும் எப்போதும் எதிரியாகத்தான் இருக்கிறார்கள்.
ரொனால்டோ அதிக கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். மெஸ்ஸி கோல்கள் அசிஸ்ட்ஸ் பட்டியலில் அவரை முந்தியுள்ளார்.
இருவரும் லா லீகா தொடரில் விளையாடிய காலங்கள் மிகவும் பொற்காலமாக இருந்தன.
இந்நிலையில் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறியாதாவது:
எனக்கும் மெஸ்ஸி மீது அன்பு இருக்கிறது. நாங்கள் 15 ஆண்டுகளாகப் போட்டியாளர்களாக இருந்து வருகிறோம்.
நாங்கள் இணைந்து விளையாடுவோமா என்பது தெரியவில்லை. எனக்கு 40 வயதாகிறது.
எப்போதும் முடியாது எனக் கூறமாட்டேன். நமக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 8:44 am
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: வியட்நாமை வீழ்த்தியது மலேசியா
June 11, 2025, 8:41 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: நெதர்லாந்து அபாரம்
June 10, 2025, 9:01 am
உலகக் கிண்ண தகுதி சுற்று: பெல்ஜியம், குரோஷியா வெற்றி
June 10, 2025, 8:53 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இத்தாலி வெற்றி
June 9, 2025, 9:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் சாம்பியன்
June 9, 2025, 9:51 am
நேஷன் லீக் : கண்ணீர் சிந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ
June 8, 2025, 9:42 am