நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15 மாணவர்கள் மரணமடைந்த கோர விபத்து : பிரதமர் இரங்கல்

கிரிக், 

உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துள்ளான சம்பவத்தில் 15 பேர் அகார மரணமடைந்தனர். இது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தம்மையும் தமது துணையியார் வான் அஸிசாவையும் வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்ட பிரதமர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டுமென்றும் அவர் தமது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். வாழ்க்கை விலைமதிப்பற்றது. அவசரப்படமால் கவனமாக இருக்க வேண்டுமென பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹஜ் பெருநாள் முடிந்து, கிளந்தான் திரங்கானுவிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி - கிரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் 15 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். அதே வேளையில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset