நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் சிக்கியப் பேருந்தில் நானும் பயணித்திருக்க வேண்டும்: மாணவி அலியா

கோத்தா பாரு:

15 மாணவர்கள் மரணமடைந்த பேருந்து விபத்தில் தாமும் சிக்கியிருக்க்ககூடுமென உப்சி பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவி அலியா தெரிவித்துள்ளார்.

திரெங்கானு செத்தியுவில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடி விட்டு நேற்று இரவு விபத்தில் சிக்கியப் பேருந்தில் தாமும் பயணித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் தனது பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் நேரிட்டதாகவும் அலியா பெரித்தா ஹரியான் ஊடகத்திடம் குறிப்பிட்டார்.

பெருநாளை முன்னிட்டு தாம் சொந்த ஊருக்குச் சென்றதாகவும் இருப்பினும் சில காரணத்தால் கடந்த வியாழக்கிழமை மீண்டும் உப்சி திரும்பியதாகவும் தெரிவித்தார். 

அதனால் இங்கே தியாகப் பெருநாளைக் கொண்டாடியதாகக் குறிப்பிட்டார். 

இன்று அதிகாலை 3 மணியளவில், உப்சி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி அதில் பயணித்த 15 மாணவர்கள் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தி தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் அவர் வேதனையாக கூறியுள்ளார். 

பேருந்தில் இருந்த அனைவரும் பெசுட் மற்றும் செத்தியு, தெரெங்கானுவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

- நன்றி Berita Harian

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset