நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரிக்கில் பேருந்து விபத்தில் மரணமடைந்த 15 உப்சி மாணவர்களின் உடற்கூறு ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கின 

தஞ்சோங் மாலிம்: 

இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் பலியான வேளையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மரணமடைந்த 15 பேரின் உடல்கள் மீது இன்று உடற்கூறு ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றனர். 

இதனால் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனை, கிரிக் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் உடற்கூறு ஆய்வு மையத்தில் உடல்கள் கொண்டு வரப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தன. 

பாதிக்கப்பட்ட உப்சி பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் கூறினார். 

மேலும், மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் அதன் நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது. 

44 பேர் பயணம் செய்த பேருந்தும் MPV ரக காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset