
செய்திகள் மலேசியா
கிரிக்கில் கோர சாலை விபத்து: நடவடிக்கை அறையை திறந்தது உப்சி பல்கலைக்கழக நிர்வாகம்
தஞ்சோங் மாலிம்:
தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய கோர சாலை விபத்தில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உப்சி பல்கலைக்கழக நிர்வாகம் அதன் நடவடிக்கை அறையைத் திறந்தது.
மேல் விபரங்களுக்கு 05-4507148 என்ற எண் மூலமாக அழைத்து விபரங்களைப் பெற்று கொள்ள உப்சி பல்கலைக்கழக நிர்வாகம் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
44 பேர் பயணம் செய்த பேருந்து ஒன்று உப்சி பல்கலைக்கழகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எம்.பி.வி ரக காருடன் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சாலை விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2025, 4:49 pm
இருக்கையை அகற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டும் இளைஞரின் காணொலி வைரல்
June 9, 2025, 1:00 pm
சாலையில் அடாவடி புரிந்த சிங்கப்பூர் நாட்டு ஆடவர் ஜொகூரில் கைது: காணொலி வைரல்
June 9, 2025, 11:09 am
வீட்டுமனை திட்டத்தில் தள்ளுபடி :சுந்தராஜூவை சாடினார் இராமசாமி
June 9, 2025, 10:26 am
எல்.ஆர்.டி கெலானா ஜெயா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: எல்.ஆர்.டி சேவையில் தாமதம்
June 9, 2025, 10:17 am