நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரிக்கில் கோர சாலை விபத்து: நடவடிக்கை அறையை திறந்தது உப்சி பல்கலைக்கழக நிர்வாகம் 

தஞ்சோங் மாலிம்: 

தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய கோர சாலை விபத்தில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உப்சி பல்கலைக்கழக நிர்வாகம் அதன் நடவடிக்கை அறையைத் திறந்தது. 

மேல் விபரங்களுக்கு 05-4507148 என்ற எண் மூலமாக அழைத்து விபரங்களைப் பெற்று கொள்ள உப்சி பல்கலைக்கழக நிர்வாகம் வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

44 பேர் பயணம் செய்த பேருந்து ஒன்று உப்சி பல்கலைக்கழகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எம்.பி.வி ரக காருடன் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சாலை விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset