நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேஷன் லீக் : கண்ணீர் சிந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ

முனிச்:

ஜெர்மனி பாயன் முனிச்சில் நடந்த நேஷன் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை பெனால்டி கோலின் மூலம் வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று அதிரடி காட்டியது போர்த்துகல் அணி.

போர்த்துகல் அணியின் வெற்றி உறுதிச் செய்யப்பட்ட தருணத்தில் அவ்வணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் சிந்தியது கால்பந்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக மாறியது. அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் ரொனால்டோ என முழக்கமிட்டனர்.

நெஷன் லீக் இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை ஆனது. கூடுதல் நிமிடத்திலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி மூலம் வெற்றியாளர் தேர்தெடுக்கப்படும் சூழல் உருவானது. இதில் 5-3 என்ற பெனால்டி கோலினால் போர்த்துகல் கிண்ணத்தை வென்றது.

இதனிடையே இவ்வாடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணிக்காக அடித்த கோல் அனைத்துலக நிலையில் அவர் அடித்த 138ஆவது கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset