
செய்திகள் மலேசியா
சாலையில் அடாவடி புரிந்த சிங்கப்பூர் நாட்டு ஆடவர் ஜொகூரில் கைது: காணொலி வைரல்
ஜொகூர் பாரு:
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 40 வயதான ஆடவர் ஒருவர் மலேசியாவில் உள்ள சாலையில் அடவாடி புரிந்த நிலையில் அவர் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டார்.
வட ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் எம்.எஸ். பல்வீர் சிங் இதனை உறுதிப்படுத்தினார்.
ஒரு மலேசிய ஆடவரால் மதியம் 3.10 மணிக்கு நேற்று போலீஸ் புகார் செய்யப்பட்ட நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் காரை சாலையில் நிறுத்தி வைத்து விட்டு அது மற்ற வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தமையால் வினா எழுப்பப்பட்டது.
உடனே, அவ்வாடவர் கோபத்துடன் காரை உதைத்ததாகவும் இதனால் இந்த புகார் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை துரித நடவடிக்கையை எடுத்தது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவர் மீது போதுப்பொருள் உட்கொண்டதாக எந்தவொரு பதிவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2025, 4:49 pm
இருக்கையை அகற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டும் இளைஞரின் காணொலி வைரல்
June 9, 2025, 11:46 am
கிரிக்கில் கோர சாலை விபத்து: நடவடிக்கை அறையை திறந்தது உப்சி பல்கலைக்கழக நிர்வாகம்
June 9, 2025, 11:09 am
வீட்டுமனை திட்டத்தில் தள்ளுபடி :சுந்தராஜூவை சாடினார் இராமசாமி
June 9, 2025, 10:26 am
எல்.ஆர்.டி கெலானா ஜெயா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: எல்.ஆர்.டி சேவையில் தாமதம்
June 9, 2025, 10:17 am