
செய்திகள் மலேசியா
வீட்டுமனை திட்டத்தில் தள்ளுபடி :சுந்தராஜூவை சாடினார் இராமசாமி
பினாங்கு மாநில விடமைப்புத் திட்டத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு 5% தள்ளுபடி வழங்கிய அம்மாநில வீட்டு வசதி ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூவை பினாங்கு மாநில முன்னாள் இரண்டாம் முதல்வர் பேராசிரியர் இராமசாமி சாடினார்.
இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை
ஒரு கொள்கை விஷயத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவரால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் அறிவிப்பு வெளியிடுவது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
பினாங்கு மாநில வீட்டு வசதி ஆட்சிமன்ற உறுப்பினராக உள்ள எஸ். சுந்தராஜூ, மாநில எக்ஸ்கோவின் ஆலோசனையின்றி, மதானி வீட்டுமனை திட்டத்தின் கீழ் இந்திய முஸ்லிம்களுக்கு 5% வீட்டு தள்ளுபடி அறிவித்துள்ளார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
தரவுகளை வழங்க முடியுமா?
இந்திய முஸ்லிம்கள் வீட்டு திட்டங்களில் குறைந்த பங்கு வகிப்பதால் இந்த முடிவை எடுத்ததாக சுந்தராஜூ கூறுகிறார். ஆனால், இதற்கான ஆதார தரவுகளை அவர் வழங்க முடியுமா?
மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் இந்திய முஸ்லிம்கள் ஆகியோரின் பங்குபற்றல் விகிதங்கள் என்ன? இந்த தள்ளுபடி மலாய்காரர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளுக்கு பாதிப்பில்லையென்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், இந்திய முஸ்லிம்களில் சிலர் மலாய்/பூமிபுத்ரா என வகைப்படுத்தப்படுவார்கள், மற்றவர்கள் தனி இனக் குழுவாக இருந்து வருகிறார்கள் என்பது அவரது கவனத்திற்கு வரவில்லையோ?
இந்திய முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பூமிபுத்ரா வகைப்படுத்தலில் உள்ளனர் மற்றும் எத்தனை பேர் தனித்த இன அடையாளத்துடன் உள்ளனர் என்பதற்கான ஆய்வுகள் உள்ளதா? இப்படிப்பட்ட தரவுகளின்றி ஒரு கொள்கை முடிவை எடுப்பது, மக்கள் நலனுக்கும் சமநிலைக்கும் எதிரானதாகும். இது ஒரு சமூகத்திற்கு இருமுறை நன்மை கிடைக்க வழிவகுக்கும் என்பதிலும் நியாயம் காண இயலாது.
இது மாநில கொள்கை மீறல்
இந்தக் கோரிக்கை எக்ஸ்கோ கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால், அதன் குறைபாடுகள் விவாதிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, சுந்தராஜூ , அபிவிருத்தியாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். இது பினாங்கு மாநில வீட்டு கொள்கை அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
இது ஒரு தவறான முடிவாகும். இது வெளிப்படைத்தன்மையின்றி, பிற சமுதாயங்களின் தேவைகளை பொருட்படுத்தாமலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்த கொள்கைக்கு தெளிவான காரணமில்லை, மேலும் இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெற, தள்ளுபடியை அனைத்து தகுதியுள்ள மலேசியர்களுக்கும் விரிவாக்கிய மாநில முதல்வர் சௌ கோன் யாவை நான் பாராட்டுகிறேன்.
இதைக் கூடச் சில அடுக்குகளுக்கு மேலே கொண்டு சென்று, சட்டப்படி செயல்பட வேண்டிய ஒரு பொது கொள்கை விஷயத்தில் அவதானமின்றி, தன்னிச்சையாக நடந்துகொண்ட சுந்தராஜூவை சௌ கோன் யாவ் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என இராமசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த அறிக்கை பேராசிரியர் இராமசாமி வெளியிட்டது. இதற்கு நம்பிக்கை எந்த வகையிலும் பொறுப்பேற்காது
தொடர்புடைய செய்திகள்
June 9, 2025, 1:00 pm
சாலையில் அடாவடி புரிந்த சிங்கப்பூர் நாட்டு ஆடவர் ஜொகூரில் கைது: காணொலி வைரல்
June 9, 2025, 11:46 am
கிரிக்கில் கோர சாலை விபத்து: நடவடிக்கை அறையை திறந்தது உப்சி பல்கலைக்கழக நிர்வாகம்
June 9, 2025, 10:26 am
எல்.ஆர்.டி கெலானா ஜெயா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: எல்.ஆர்.டி சேவையில் தாமதம்
June 9, 2025, 10:17 am
விபத்தில் சிக்கியப் பேருந்தில் நானும் பயணித்திருக்க வேண்டும்: மாணவி அலியா
June 9, 2025, 9:51 am