நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் கொண்டாட்டம் நிறைவடைவதற்குள் என் மூத்த மகளை இழந்துவிட்டேன்: Fatin Nasrin-னின் தாயார் வேதனை

கோத்தா பாரு: 

பெருநாள் கொண்டாட்டம் நிறைவடைவதற்குள் தன் மூத்த மகளை இழந்து விட்டதாக உப்சி பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய பேருந்து விபத்தில் மரணமடைந்த மாணவி  Fatin Nasrin Fadli-யின் தாயார் Fieza வேதனை தெரிவித்தார். 

விடுமுறை முடிந்து மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய Fatin-யைத் தாம் தான் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வழியனுப்பி வைத்ததாகவும் இன்று காலை தன் மகள் விபத்தில் இறந்து விட்ட செய்தி தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை 6 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அறிந்ததாக Fieza தெரிவித்தார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் வழியில் தன் மகள் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

அதைக் கேட்டு தாம் மனமுடைந்து போனதாகவும்  Fieza கண்ணீர் மல்க தெரிவித்தார். 

முன்னதாக, இன்று அதிகாலை திரெங்கானுவிலிருந்து 42 உப்சி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து பேராக், கிரிக்கில் விபத்துக்குள்ளானது. 

இதில் 14 மாணவர்களும் பேருந்து உதவியாளரும் கொல்லப்பட்டனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset