நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது

ஜொகூர்பாரு:

ஜொகூரில் உள்ள சிகாமட்டில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று காலை 8.59 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது.

அதன் படி, ஜொகூர், தெற்கு பகாங்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மெட்மலேசியா நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அது ஒரு குறிப்பில் கூறியது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு சிகாமாட்டைத் தாக்கிய 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இது மூன்றாவது பலவீனமான நிலநடுக்கமாகும்.

அதைத் தொடர்ந்து அதே நாளில் காலை 9 மணிக்கு பட்டு பகாட்டில் உள்ள யோங் பெங்கைத் தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset