
செய்திகள் இந்தியா
அயோத்தி ராமர் பிரசாதம் பெயரில் பல கோடி மோசடி
புது டெல்லி:
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி இணையதளத்தில் 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரித்த போலீஸார் போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் போலி இணையதளத்தை உருவாக்கி ராமர் கோயில் பிரசாதம் இந்தியாவில் ரூ.51, வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் கட்டணம் வசூலித்துள்ளார்.
அப்படி 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாயை ஏமாற்றி வசூலித்துள்ளார்.
போலீஸார் அவரை கைது செய்தனர். இணையதள பிரசாத விளம்பரங்களின் நம்பகத்தன்மையை மக்கள் சரிபார்க்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am