
செய்திகள் இந்தியா
அயோத்தி ராமர் பிரசாதம் பெயரில் பல கோடி மோசடி
புது டெல்லி:
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி இணையதளத்தில் 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரித்த போலீஸார் போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் போலி இணையதளத்தை உருவாக்கி ராமர் கோயில் பிரசாதம் இந்தியாவில் ரூ.51, வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் கட்டணம் வசூலித்துள்ளார்.
அப்படி 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாயை ஏமாற்றி வசூலித்துள்ளார்.
போலீஸார் அவரை கைது செய்தனர். இணையதள பிரசாத விளம்பரங்களின் நம்பகத்தன்மையை மக்கள் சரிபார்க்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 3:39 pm
உலகின் உயரமான ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்
June 5, 2025, 8:34 pm
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிப்பு
June 5, 2025, 5:29 pm
2.5 கோடி போலி ரயில் முன்பதிவு கணக்குகள் முடக்கம்
June 4, 2025, 10:23 pm
டிரம்பிடம் மோடி சரண்: ராகுல்
June 4, 2025, 10:05 pm
பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரை சேர்க்க, நீக்க புதிய முறை
June 3, 2025, 5:49 pm