
செய்திகள் மலேசியா
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
கோலாலம்பூர்:
சுங்கை பீசி Besraya நெடுஞ்சாலையில் இரவு வேளையில் பராமரிப்புப் பணிகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று பெஸ்ராயா (ம) சென். பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்தது.
பராமரிப்பு பணிகள் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது.
நெடுஞ்சாலையின் இரு திசைகளையும் உள்ளடக்கிய சாலைகளை மூடும் பணி கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று பராமரிப்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.
தார் போடுதல், சாலை அடையாளங்களை இடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பராமரிப்புப் பணிகள் ஒவ்வொரு நாளும் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவில் மட்டுமே நடைபெறும்.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதை மூடல் உள்ளிட்ட போக்குவரத்துத் தகவல்களை நெடுஞ்சாலையில் உள்ள மின்னணு அறிவிப்பு சாதனங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் என்று பெஸ்ராயா உறுதி செய்தது.
நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் அறிவிப்பு சாதனங்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm