நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறிய உணவகங்கள் பயன்படுத்தும் எல்பிஜி எரிவாயு (GAS) விதிகளை அரசு மறுபரிசீலிக்கிறது: அர்மிசான் அலி

கோலாலம்பூர்:

சிறிய உணவகங்கள் மற்றும் பானக் கடைகள் பயன்படுத்தும் மானியமுள்ள எல்பிஜி (LPG) எரிவாயுகளுக்கான விதிகளை அரசாங்கம் மறுபரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோஅர்மிசன் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை அமைச்சரவை முன்னமே ஒப்புக்கொண்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக “மறுபரிசீலனை முடிவடையும் வரை, சிறிய உணவகங்கள் மற்றும் நடுத்தர வியாபாரிகள், மானியத்துடன் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயுகளை விண்ணப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.  

அதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் உறுதியளித்தார்.

இருப்பினும், பெரும் தொழில்கள் மற்றும் தகுதி இல்லாத தரப்புகள், மானியமுள்ள எரிவாயுகளை தவறாக பயன்படுத்துவதையும், ஒரு எரிவாயுவிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றும் நடவடிக்கைக்கு அரசு கடுமையான நடவடிக்கையை முன்னெடுக்கும் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை 2025 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, ஒரே நேரத்தில் 42 கிலோகிராம் க்கும் அதிகமாக எல்பிஜி எரிவாயுகளை பயன்படுத்தும் வியாபாரிகள், “திட்டமிட்ட கட்டுப்பாட்டு பொருட்கள் அனுமதி” (Scheduled Controlled Goods Permit) என்ற அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். 

இதுதான் 2021-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் (PPKB) கீழ் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இவ்விதி சிறிய உணவகங்களுக்கு சிரமமாக இருப்பதால், அதனை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், சரியான மாற்றங்களை மேற்கொள்ளவும், அமைச்சர் தலைமையிலான தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு பல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset