நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சிங்கை வளர்பிறை மகளிர் வட்டத்தின் 'குன்றென நிமிர்ந்து நில்' கருத்தரங்கம் 

சிங்கப்பூர்:

குன்றென நிமிர்ந்து நில் என்னும் கருப்பொருளைக் கொண்டு வளர்பிறை மகளிர் வட்டத்தின் ஏற்பாட்டில் (14 நவம்பர் ஞாயிறு) காலை 11மணிக்கு மெய்நிகர் ஜூம் வழியாக பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.  

வளர்பிறை மகளிர் வட்டத்தின் தலைவி திருமதி மஹ்ஜபீன் “கல்வி கண் திறக்கட்டும்” என்ற தலைப்பிலும், திருமதி மிஸ்காத் பேகம் “குடும்பத்தை குதூகலமாக்குவோம்” என்ற தலைப்பிலும், திருமதி நர்கீஸ் பானு “தன்னம்பிக்கை உன் கையில்” என்ற தலைப்பிலும் திருமதி நஸ்ரின் பானு “மனித நேயம் காப்போம்” எனும் தலைப்பிலும் திருமதி நபிலா நஸ்ரின் “அன்பெனும் ஆயுதம்” என்ற தலைப்பிலும் கருத்துரைக்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன்  கருத்தரங்கத்திற்கு தலைமைதாங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார். 

புதிய நிலா மு. ஜஹாங்கீர் வாழ்த்துரை வழங்க, சிங்கை முஸ்லிம் லீக் துணைத்தலைவர் முஹம்மது பிலால் நிறைவுரை நிகழ்த்துகிறார். 

மகளிர் பிரிவு நடத்தும் இந்நிகழ்வில் Zoom : 502 206 2546 Passcode: 14112021 மூலம் அனைவரும்  பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset