நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கியில் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 வெளிநாட்டு தொழிலாளர்கள் காயம்

பாங்கி:

பாங்கியில் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 வெளிநாட்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம்  இன்று காலை பண்டார் பாரு பாங்கியில் நடந்ததது.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புப் படையினரக்கு காலை 6.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

பாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், காஜாங்கில் இருந்து மொத்தம் 13 பணியாளர்கள் இயந்திரங்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மூத்த தீயணைப்பு அதிகாரி ரஹமத் சபாருடின் தலைமையில் அவர்கள் மீட்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலை பேருந்து சறுக்கி கவிழ்ந்ததில் மொத்தம் 33 வெளிநாட்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

பாதிக்கப்பட்ட எட்டு பேர் கூடுதல் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனை. செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,

மீதமுள்ளவர்களுக்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே ஆரம்ப சிகிச்சை அளித்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset