நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

குற்றம் செய்யவில்லை என்றால், டத்தோஶ்ரீ அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹமத் இக்கேள்வியை எழுப்பினார்.

தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு வழக்கில் விதிவிலக்கு கோரிய டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கை, அவர் குற்றம் செய்தவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு மன்னராக இருந்தாலும்  குற்றம் செய்தால் நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட முடியாது.

அவர் தவறு செய்தால், அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரலாம். 

ஆனால் அவர் தனக்கென விதிவிலக்கு கேட்கிறார். இதன் மூலம் அவர் தவறு செய்ததாக ஒப்புக் கொள்கிறார்.

அவர் குற்றவாளி அல்ல என்று கண்டறியப்படுவதற்கான ஒரே வழி விதிவிலக்கு மூலம் மட்டுமே என்று அவர் த்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் துன் மகாதீர் இவ்வாறு  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset