நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இது எனது  தனிப்பட்ட விலக்குரிமை தொடர்பான விஷயம் அல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

தனக்கு எதிரான வழக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் ஒருபோதும் வழக்குகளில் இருந்து தனிப்பட்ட விலக்குரிமையைப் பெறுவதற்காக அல்ல.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அன்வாரின் முன்னாள் உதவியாளர் யூசோப் ராவ்தர் தாக்கல் செய்த சிவில் வழக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான விண்ணப்பத்தை நிராகரித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விஷயம் ஒருபோதும் தனிப்பட்ட விலக்குரிமையைப் பெறுவது அல்லது சட்ட ஆய்வில் இருந்து தப்பிப்பது பற்றியது அல்ல.

இது நமது அரசியலமைப்பு அமைப்பின் நேர்மையை ரீதியாக காலவரையறை செய்யப்பட்டதாகும்.

அரசியல் நோக்கங்கள் கொண்டது அல்ல.

மேலும் நிறுவன ரீதியாக சீர்குலைக்கும் வழக்குகளிலிருந்து உயர் பொது அலுவலகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அவசியத்தையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

முன்னதாக, உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவர் ரோசெய்ன்,

டத்தோஶ்ரீ அன்வார் கூட்டாட்சி நீதிமன்றத்திற்குக் குறிப்பிட முயன்ற எட்டு அரசியலமைப்பு கேள்விகள் தேவையான வரம்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset