
செய்திகள் மலேசியா
ஐஜேஎன் மருத்துவ அதிகாரிகளின் சேவைகளை புருணை சுல்தான் பாராட்டினார்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஐஜேஎன் மருத்துவ அதிகாரிகளின் சேவைகளின் தரம், நிபுணத்துவத்தை புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்னால் போல்கியா பாராட்டியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மருத்துவ மையத்தில் சிகிச்சையின் போது புருணை சுல்தான் ஐஜேஎன்னில் உள்ள மருத்துவர்களின் சேவைகள், புணத்துவத்தில் மிகவும் திருப்தி அடைந்ததார்.
புருணை சுல்தான் நேற்று மாலை பண்டார் ஸ்ரீ பகவானுக்குச் செல்வதற்கு முன்பு ஐஜேஎன்னில் அவரைச் சந்தித்தபோது, அவர் இந்த பாராட்டுகளை நேரில் வழங்கியதாக அன்வார் கூறினார்.
அனைத்துலக தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் உலகின் சிறந்த மருத்துவ நிறுவனங்களுக்கான அணுகல் ஆகியவற்றில் தனக்கு அனுபவம் இருந்தாலும்,
ஐஜேஎன்னில் உள்ள எங்கள் மருத்துவர்களின் சேவையின் தரம், சிறப்பு மற்றும் திறமை ஆகியவற்றில் அவர் மிகவும் திருப்தி அடைவதாக புருணை சுல்தான் கூறியதாக பிரதமர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm