நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்

புது டெல்லி: 

தலைநகர் டெல்லியின் ஜங்புரா பகுதியில் 370  தமிழர்கள் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில்  தமிழர்கள் குடியேறினர்.

இவர்கள் சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டகளைச் சேர்ந்தவர்கள்.
அங்குள்ள வீடுகளில் பணிப் பெண்களாகவும், ஆண்கள் காலையில் கார்களை துடைத்து சுத்தப்படுத்தும் பணிகள் உள்பட தினசரி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர்.  ரயில் வழித்தடம் அருகே அமைந்துள்ள சிறு குடியிருப்புகளை காலி செய்யுமாறு டெல்லி பொதுப் பணித் துறை நோட்டீஸ் வழங்கியது.

இதை எதிர்த்து மதராசி அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மதராசி கேம்ப் பகுதியில் மே 20-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை காலி செய்ய வேண்டும் என்றும் ஜூன் 1-ம் தேதி முதல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ,டெல்லி பொதுப் பணித் துறை அதிகாரிகள், காவல் துறை புல்டோசர் மூலம் மதராசி கேம்ப் ஞாயிற்றுக்கிழமை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதற்கு அப்பகுதி தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி வீடுகளை இடித்து தள்ளினர்.

“மதராசி கேம்ப் பகுதியில் சுமார் 370 குடும்பங்கள் வசித்து வந்தாலும், 189 குடும்பங்களுக்கு மட்டுமே தில்லி அரசு வீடுகளை ஒதுக்கி உள்ளது. அதுவும் தில்லியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளதால் எங்கள் வாழ்வாதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அப் பகுதிவாசி தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset