நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தை துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் பெற்றோரின் பங்கு குறித்த சட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது: அஸாலினா

புத்ராஜெயா:

குழந்தை துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் பெற்றோரின் பங்கு குறித்த சட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

பிரதம மந்திரியின் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸாலினா ஒத்மான் இதனை கூறினார்.

குழந்தை துஷ்பிரயோகம்,  புறக்கணிப்பைத் தடுக்கும் முயற்சிகளில் பெற்றோர்,  பாதுகாவலர்களுக்கான தெளிவான கடமைகளை கொண்டிருக்க வேன்டும்.

அதை அடிப்படையாக கொண்டுஅரசாங்கம் தற்போதுள்ள பல சட்ட விதிகளை ஆராய்ந்து வருகிறது.

இதில் குழந்தைகளின்  நடத்தையை கண்காணிப்பதை கட்டாயமாக்குவதற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள், இலக்கவியல் பாதுகாப்பு விழிப்புணர்வு, கல்வித் திட்டங்களில் தீவிரமாக பங்கேற்பது ஆகியவை அடங்கும்.

இந்த அணுகுமுறை இலக்கவியல் யுகத்தில் பாலியல் குற்ற அச்சுறுத்தலில் இருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட பொறுப்பு என்ற கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset