நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலானில் தெங்கு ஸப்ருல்; கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ரபிசி

கோலாலம்பூர்:

கெஅடிலானில் தெங்கு ஸப்ருல் இணையவுள்ளதால்  கட்சியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி கூறினார்.

தெங்கு ஸப்ருல் அப்துல் ஹஜிஸ் கெஅடிலானில் சேர விரும்புவது குறித்து கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்.

ஒற்றுமை அரசாங்க ஒப்பந்தத்தில் மடானி கூட்டணிகளுக்கு இடையில் கட்சி உறுப்பினர்கள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.

என்றாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்சி தாவல் தவிர்க்கப்பட வேண்டும்.  அது எதிர்பாராத விளைவுகளுக்கு கதவைத் திறக்கும்.

ஒரு அம்னோ உறுப்பினர் கெஅடிலானில் இணைந்தால், நாம் எங்கு எல்லை வகுக்க வேண்டும்?

இது போன்ற விஷயங்கள் இறுதியில் ஒற்றுமை அரசாங்க மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset