நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலானில் எந்த நியமன பதவியையும்  ஏற்க மாட்டேன்: ரபிசி

கோலாலம்பூர்:

கெஅடிலானில் எந்த நியமன பதவியையும் ஏற்க மாட்டேன் என்று அதன் முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.

நூருல் இசா என்னைச் சந்தித்தபோது இன்னொரு துணைத் தலைவர் நியமிக்கப்பட்டால், நான் துணைத் தலைவராக நியமிக்கப்படுவேன் என்று ஆலோசனையை கூறினார்.

இதன் மூலம் நூருல் இசா அன்வார்  எனக்கு இரண்டாவது துணைத் தலைவர் பதவியை வழங்கவும் முன்வந்தார்.

தலைவர்  நியமித்தாலும் எனக்கு எந்தப் பதவியிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில் அது பதவியைப் பற்றியது அல்ல.

 ஆனால் நாம் கொண்டு வர விரும்பும் செய்தி, போராட்டத்தைப் பற்றியது  என்று அவர் கூறினார்.

வாக்காளர்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினராகவும்  பாண்டன் கெஅடிலான் தொகுதித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.

இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் என்று ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset