நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்பின் வரி கொள்கை பிரச்சினை; அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதை  மாரா நிறுத்தும்: அஸ்ராஃப்

கோலாலம்பூர்:

டிரம்பின் வரி கொள்கை பிரச்சினையால் அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதை மாரா நிறுத்தும்.

மாராவின் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி இதனை கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதனால் இந்த ஆண்டு முதல் தனது நிதியுதவி பெற்ற மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை மாரா நிறுத்தும்.

 நாட்டில் உள்ள ஆயத்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களுடன் வேறு இடங்களில் தங்கள் படிப்பைத் தொடர தனது கட்சி விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான்,  சீனா  ஆகிய நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர அவர்களை அனுப்புவோம்.

இந்த நாடுகளுக்கான செலவு அமெரிக்காவை விடவும் மலிவானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset