
செய்திகள் இந்தியா
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
புது டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
ஆனால், எத்தனை போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறவில்லை.
சிங்கப்பூரில் புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியிளித்த அவரிடம் நான்கு நாள் சண்டையில் இந்தியா 6 போர் விமானங்களை இழந்ததாக பாகிஸ்தான் கூறுவதைக் கேட்டபோது அவர் மறுத்தார்.
பாகிஸ்தானுடனான சண்டையில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது முக்கியமல்ல.
எங்களின் போர்த் தந்திரத்தில் முதலில் ஏற்பட்ட தவறை புரிந்துகொண்டு 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக இயக்கினோம்.
இந்திய போர் விமானங்கள் நீண்ட தொலைவை இலக்காகக் கொண்டு பறக்கவிடப்பட்டன என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று முதலில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். அவரை பாஜகவினர் கடுமையா விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ஒன்றிய அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது. உண்மை தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:51 pm
ரஷிய போர் விமான சக்கரங்களில் இயங்கும் ஜெகந்நாதர் ரதம்
June 2, 2025, 6:39 pm
டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்
June 2, 2025, 6:33 pm
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
June 2, 2025, 6:03 pm
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm
கன்னடத்தின் பண்டைய வரலாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது: முதல்வர் சித்தராமையா
May 27, 2025, 4:34 pm
சென்னை வந்த துபாய் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
May 26, 2025, 7:30 pm