
செய்திகள் மலேசியா
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
கோல சிலாங்கூர்:
5ஆம் படிவ மாணவர் ஒருவர் வீடு திரும்பும் வழியில் லோரி மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நேற்று இங்குள்ள ஜெராமில் உள்ள ஜாலான் பாரிட் மஹாங்கில் பிற்பகல் 2.15 மணியளவில் நடந்தது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோலா சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் அசாஹருதீன் தாஜுடின் கூறுகையில்,
ஜாலான் பாரிட் மஹாங்கிற்கு பிரதான சாலையிலிருந்து 26 வயது நபர் லோரியை ஓட்டிச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர், மறுபுறம், ஜாலான் பாரிட் மஹாங்கிலிருந்து ஈஜோக்கில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்ப பிரதான சாலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
சம்பவ இடத்தில் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லோரியின் பாதையில் நுழைந்து கனரக வாகனத்தின் முன்பக்கத்தில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 9:56 am
தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: டாக்டர் அக்மல்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm