
செய்திகள் மலேசியா
10 ரிங்கிட்டுக்கு நாசி கண்டார்; அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க நல்ல முயற்சி: டத்தோ ஜவஹர் அலி
கோலாலம்பூர்:
10 ரிங்கிட்டுக்கு நாசி கண்டார் உணவை வழங்குவதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை உணவகங்களுக்கு ஈர்க்க நல்ல முயற்சியாகும்.
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.
நாட்டில் உள்ள அதிகமான நாசி கண்டார் உணவகங்கள் அவற்றின் திறனின் அடிப்படையில் 10 ரிங்கிட்டுக்கு நாசி கண்டார் உணவை அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்த முயற்சி ஒரு நல்ல முயற்சியாகும்.
குறிப்பாக அதிகமான வாடிக்கையாளர்களை உணவகங்களுக்கு ஈர்க்க முடியும்.
ஆகையால் இந்த முயற்சியில் சேர அனைத்து உணவக உரிமையாளர்களையும் நான் ஊக்குவித்து முழு ஆதரவையும் வழங்கிறேன்.
வாடிக்கையாளர்களுக்கு தேர்வுகளை வழங்குவது மட்டுமல்லாமல்,
நியாயமான விலையில் உணவை அனுபவிக்கவும் அனுமதிக்கும் இந்த முயற்சியை பிரெஸ்மா வரவேற்கிறது என்று அவர் கூறினார்.
மலாக்காவில் உள்ள 24 மணி நேர நாசி கண்டார் உணவகம் தான் 10 ரிங்கிட் போன்ற குறைந்த விலையில் நாசி கண்டார் மெனுவை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,
குறிப்பாக பி40 மக்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று பிரெஸ்மா நம்புகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm