நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியாகப் பெருநாளை முன்னிட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்: பிளஸ்

கோலாலம்பூர்:

தியாகப் பெருநாளை முன்னிட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்.

தேசிய நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் இதனை கூறியது.

தியாகப் பெருநாளுடன் விடுமுறையும்  இணைந்து வருவதால் நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகன நெரிசல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமான ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம்.

வரும் ஜூன் 5, 6,  ஜூன் 8 முதல் 9 வரை நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைபிளஸ் - டிடிஏ டிஜிட்டல் பயண அட்டவணையைப் பார்த்து, பண்டிகை காலத்தில் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் மக்களை அறிவுறுத்தியது.

இந்த பண்டிகை காலம் முழுவதும் பயனர்கள் மென்மையான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்க உதவும் வகையில் தியாகப் பெருநாள் விடுமுறையின் போது ஏற்படும் போக்குவரத்தை நிர்வகிக்க பிளஸ் தயாராகி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset