நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்; விரைவில் கெஅடிலானில் இணைவேன்: தெங்கு ஸப்ரூல்

கோலாலம்பூர்:

அம்னோவின் அனைத்து பொறுப்புகளில்  இருந்து விலகுவதுடன் விரைவில் கெஅடிலானில் கட்சியில் இணையவுள்ளேன்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ரூல் இதனை அறிவித்தார்.

இன்று, நான் எனது ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமைக்கு அனுப்பியுள்ளேன்.

உச்சமன்ற உறுப்பினர் பதவி, அம்னோ கோத்தா ராஜா தொகுதி தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

குறிப்பாக கட்சியின் அடிமட்ட உறுப்பினர் அந்தஸ்தில் இருந்தும் விலகுகிறேன்.

இந்த முடிவு எளிதான ஒன்றல்ல.

இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியின் தலைவர் உட்பட, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எனது நண்பர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டேன்.

இந்த முடிவைப் பற்றி ஆழமாக சிந்திக்க நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டேன்.  1997ஆம் ஆண்டு முதல் நான் சேர்ந்த ஒரே அரசியல் கட்சி அம்னோ மட்டும் தான்.

இறுதியாக  பல்வேறு காரணங்களை  கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்தேன்.

அதே நேரத்தில் கெஅடிலான் கட்சியில் சேரும் எனது விருப்பத்தை அக்கட்சியின் தலைவர், பொதுச் செயலாளரிடம் தெரிவித்து விட்டேன்.

கெஅடிலான் உறுப்பினராவதற்கு வழக்கமான விண்ணப்ப நடைமுறையை நான் பின்பற்றுவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset