
செய்திகள் மலேசியா
அம்னோவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்; விரைவில் கெஅடிலானில் இணைவேன்: தெங்கு ஸப்ரூல்
கோலாலம்பூர்:
அம்னோவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதுடன் விரைவில் கெஅடிலானில் கட்சியில் இணையவுள்ளேன்.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ரூல் இதனை அறிவித்தார்.
இன்று, நான் எனது ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமைக்கு அனுப்பியுள்ளேன்.
உச்சமன்ற உறுப்பினர் பதவி, அம்னோ கோத்தா ராஜா தொகுதி தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
குறிப்பாக கட்சியின் அடிமட்ட உறுப்பினர் அந்தஸ்தில் இருந்தும் விலகுகிறேன்.
இந்த முடிவு எளிதான ஒன்றல்ல.
இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியின் தலைவர் உட்பட, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எனது நண்பர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டேன்.
இந்த முடிவைப் பற்றி ஆழமாக சிந்திக்க நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டேன். 1997ஆம் ஆண்டு முதல் நான் சேர்ந்த ஒரே அரசியல் கட்சி அம்னோ மட்டும் தான்.
இறுதியாக பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்தேன்.
அதே நேரத்தில் கெஅடிலான் கட்சியில் சேரும் எனது விருப்பத்தை அக்கட்சியின் தலைவர், பொதுச் செயலாளரிடம் தெரிவித்து விட்டேன்.
கெஅடிலான் உறுப்பினராவதற்கு வழக்கமான விண்ணப்ப நடைமுறையை நான் பின்பற்றுவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm