நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்

கோத்தாகினபாலு:

சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சபாவில் ஊழல் குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அனைவரும்  சட்ட செயல்முறை மதிக்க வேண்டும்.

சபாவில் கனிம ஆய்வு உரிமங்களை வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ வைரலானதிலிருந்து, 

எம்ஏசிசி நடவடிக்கை எடுக்காதது குறித்து அன்வார் முதல் முறையாக தனது அதிருப்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நிச்சயமா நான் முதலில் இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை.  

ஆனால் அது சூடுபிடித்தப்போ இந்த வீடியோக்கள் என்ன?னு எமஏசிசியிடம் கருத்து கேட்டேன்.

நாங்கள் பிரச்சினையை மூடிமறைக்கிறோம் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது.

பெனாம்பாங்கில் மாநில அளவிலான கெமாத்தான் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset