
செய்திகள் மலேசியா
அனைத்துலக புத்தக கண்காட்சியில் ஒரே தமிழ் புத்தக நிறுவனமான ஜெயபக்தி இடம் பெற்றுள்ளது பெருமையளிக்கிறது: பிரபாகரன்
கோலாலம்பூர்:
அனைத்துலக புத்தக கண்காட்சியில் ஒரே தமிழ் புத்தக நிறுவனமான ஜெயபக்தி இடம் பெற்றுள்ளது பெருமையளிக்கிறது.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இதனை கூறினார்.
உலக வாணிப மையத்தில் 42ஆம் ஆண்டு அனைத்துலக புத்தகக் கண்காட்சி விழா மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த மே 23 ஆம் தேதி தொடங்கிய இப்புத்தக கண்காட்சி ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து 42 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி நிறுவனம் பங்கேற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
டேவான் மெர்டேக்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன கூடாரத்தில் குயில் ஜெயபக்தி புத்தகங்கள்விற்பனையில் உள்ளன.
இம்முறை 258 நூல் நிறுவனங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் 1,200 புத்தக முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரே தமிழ் புத்தகக நிறுவனமாக குயில் ஜெயபக்தி விளங்குவது பெருமை அளிக்கிறது என்று பிரபாகரன் தெரிவித்தார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தக விற்பனை முகப்பிடத்திற்கு இன்று சிறப்பு வருகை புரிந்த பிரபாகரனுக்கு குயில் ஜெயபக்தி உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
தமிழர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குயில் ஜெயபக்தியின் தமிழ் பணியை பெரிதும் பாராட்டுகிறேன் என்று பிரபாகரன் தெரிவித்தார் .
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm