நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீக்கு சொந்தமான கிட்டத்தட்ட 32 மில்லியன் ரிங்கிட் சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது

புத்ராஜெயா:

பிரபல டான்ஸ்ரீக்கு சொந்தமான கிட்டத்தட்ட 32 மில்லியன் ரிங்கிட் சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது.

சுக்குக் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, டான்ஸ்ரீ என்ற நெடுஞ்சாலை சலுகையாளருக்குச் சொந்தமான  சொத்துகள் பறிமுதல் செய்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலைகள் கட்டுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கைப்பைகள், நகைகள், சொகுசு வாகனங்கள், கைக்கடிகாரங்கள், பணம், தலைநகரில் ஒரு சொகுசு வீடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நபருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில்  எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில்,

ஒரு வீட்டில் பல்வேறு வகையான ஆடம்பர மதுபானங்களை சேமித்து வைத்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் ரிங்கிட் ஆகும்.  பணமோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுவதாகவும்  எம்ஏசிசி வட்டாரம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset