நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மலேசியாவிடம் மன்னிப்பு கோரினார்

நியூயார்க்:

1எம்டிபி  ஊழலில் முக்கிய பங்கு வகித்ததற்காக முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் டிம் லீஸ்னருக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தண்டனை பெற்ற லீஸ்னர் மலேசியர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேலும்   இன்றைய விசாரணையின் போது நீதிபதி மார்கோ பிராடி அவரை கடுமையாகக் கண்டித்தார்.

லீஸ்னரின் செயல்களை தைரியமான, வெட்கமற்றது என்று பிராடி கண்டனம் செய்தார்.

மேலும் முன்னாள் வங்கியாளர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்திருந்தாலும், பல நாடுகளை உள்ளடக்கிய உயர் மட்ட ஊழலால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை அவர்களால் சரிசெய்ய முடியாது என்று வலியுறுத்தினார்.

55 வயதான லீஸ்னரின் குரல் விசாரணையில் தனது அறிக்கையைப் படிக்கும்போது நடுங்கியது.

குறிப்பாக  மலேசிய மக்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது செயல்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset