
செய்திகள் மலேசியா
மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக பிஎச், தேமு, ஜிஆர்ஸ் இன்னும் ஒத்துழைப்புக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன: பிரதமர்
கோத்தா கினபாலு:
நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி, ஜிஆர்எஸ் ஆகியவை மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு ஒத்துழைப்பை உருவாக்க இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பிரதமர் டத்தோச்ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
நேற்று இரவு கோத்தா கினபாலுவில் சபா நம்பிக்கை கூட்டணி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
மத்திய அரசாங்கத்திற்கும் சபா அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
மாநிலத்தின் அதன் மக்களின் நலனை பாதுகாக்க பரஸ்பர நம்பிக்கை பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவை 17ஆவது சபா பொதுத் தேர்தலில் ஒரு கூட்டணியை அறிவித்தன.
இந்த தேர்தல் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 9:56 am
தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: டாக்டர் அக்மல்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm