
செய்திகள் மலேசியா
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
கோலாலம்பூர்:
அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் மறுத்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகளுக்கு மத்தியில் கைரி ஜமாலுடின் மீண்டும் அமைச்சரவையில் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த ஊகங்களை அவர் முழுமையாக நிராகரித்தார்.
மேலும் என்னுடைய பல வணிகங்கள் மற்றும் திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புவதாக கைரி செய்தியாளர்களிடம் கூறினார்.
இப்போது எனக்கு நிர்வகிக்கப்பட வேண்டிய பல முடிக்கப்படாத திட்டங்கள் உள்ளன என்று மட்டுமே சொல்ல முடியும்.
இதனால் நான் பிஸியாக உள்ளேன். தற்போது செய்து வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவே குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை, அரசியல் உலகிற்குத் திரும்புவது பற்றி நான் யோசிக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 9:56 am
தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: டாக்டர் அக்மல்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm